துஆ அஹ்த்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
துஆ அஹ்த்
இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: 'யாரொருவர் நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக துஆ அஹ்தினை காலையில் ஓதி வருகின்றாரோ அவரை இறைவன் இமாமுஸ் ஸமான் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் தோழர்களில் சேர்க்கின்றான். அதற்கு முன்னர், அவர் மரணித்தாலும் அவரை கப்ரிலிருந்து எழுப்பி இமாமுடன் சேர்ப்பிக்கின்றான். மேலும், அவருக்கு அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் நன்மைகளையும் வழங்குகின்றான். அதேபோல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் பாவங்களையும் மன்னிக்கின்றான்'. இவ்வாறான பிரார்த்தனைகளின் பலன்கள் யதார்த்தமாகவும், உண்மையாகவும் தங்களை இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்காக தயார்படுத்தி வைத்திருப்பவர்களுக்காகும். இவ்வாறான தயார் நிலையினை ஏற்படுத்த முதலில் சுய கட்டுப்பாடும், அதைத் தொடர்ந்து ஆத்மாவினை தூய்மைப்படுத்தி, தன்னை சீர்திருத்தி, அதைத் தொடர்ந்து தான் வாழும் சமூகத்தினையும் சீர்திருத்தம் செய்து, அவர்களையும் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களது வருகைக்காக தயார்படுத்த வேண்டும். பிறகு இந்த துஆவினை ஓதுவதன் மூலம் தன்னை இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோழர்களில் ஒருவராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பிரார்த்தனை மஸாருல் கபீர், மிஸ்பாஹுல் ஜாயிர், பிஹாருல் அன்வார் போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது.


بسم الله الرحمن الرحیم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
இறைத்தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவாயாக

اللَّهُمَّ رَبَّ النُّورِ الْعَظِيمِ وَ رَبَّ الْكُرْسِيِّ الرَّفِيعِ
இறைவா! பிரமாண்டமான ஒளியின் இரட்சகனே! உயர்ந்த ஆட்சியைப் பரிபாலிப்பவனே!

وَ رَبَّ الْبَحْرِ الْمَسْجُورِ وَ مُنْزِلَ التَّوْرَاةِ وَ الْإِنْجِيلِ وَ الزَّبُورِ
கொந்தளிக்கும் கடலின் இரட்சகனே! தௌராத், இன்ஜீல், மற்றும் ஸபூர் வேதங்களை இறக்கியவனே!

وَ رَبَّ الظِّلِّ وَ الْحَرُورِ وَ مُنْزِلَ الْقُرْآنِ الْعَظِيمِ
நிழலினதும், வெப்பத்தினதும் இரட்சகனே! மகத்துவமிக்க அல்குர்ஆனை அருளியவனே!

وَ رَبَّ الْمَلاَئِكَةِ الْمُقَرَّبِينَ وَ الْأَنْبِيَاءِ وَ الْمُرْسَلِينَ‏
மிக நெருக்கமான மலக்குமார்களினதும், நபிமார்களினதும், இறைத்தூதர்களினதும் இரட்சகனே!

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِوَجْهِكَ الْكَرِيمِ وَ بِنُورِ وَجْهِكَ الْمُنِيرِ وَ مُلْكِكَ الْقَدِيمِ
இறைவா! நான் உனது சங்கைமிகு திருமுகத்தினைக் கொண்டும், ஒளிமயமான உனது வதனத்தைக் கொண்டும், பழமையான உனது ஆட்சியினைக் கொண்டும் உன்னிடம் கேட்கின்றேன்.

يَا حَيُّ يَا قَيُّومُ‏
என்றும் நித்திய ஜீவனும், நிலையான நிரந்தரமானவனே!

أَسْأَلُكَ بِاسْمِكَ الَّذِي أَشْرَقَتْ بِهِ السَّمَاوَاتُ وَ الْأَرَضُونَ
அனைத்து வானங்களையும், பூமிகளையும் உனது திருப் பெயரினைக் கொண்டு ஒளிமயமாக்கினாயே! அப்பெயரினைக் கொண்டு உன்னிடம் நான் கேட்கின்றேன்!

وَ بِاسْمِكَ الَّذِي يَصْلَحُ بِهِ الْأَوَّلُونَ وَ الْآخِرُونَ‏
மேலும் முன்னோர்களையும், பின்னோர்களையும் நீ நேர்வழிப்படுத்திய அப்பெயரினைக் கொண்டும் உன்னிடம் கேட்கின்றேன்

يَا حَيّاً قَبْلَ كُلِّ حَيٍّ وَ يَا حَيّاً بَعْدَ كُلِّ حَيٍّ وَ يَا حَيّاً حِينَ لاَ حَيَ‏
அனைத்து உயிர்களுக்கும் முன்னர் உயிராய் இருந்தவனே! அனைத்து உயிர்களுக்குப் பின்னரும் உயிராய் இருப்பவனே! எவ்வித உயிருமற்ற போதும் உயிராய் இருப்பவனே!

يَا مُحْيِيَ الْمَوْتَى وَ مُمِيتَ الْأَحْيَاءِ يَا حَيُّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ‏
மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனே! உயிரோடு உள்ளவர்களை மரணிக்கச் செய்பவனே! உன்னையின்றி வணங்கப்படக்கூடிய யாருமற்ற நித்திய ஜீவனே!


اللَّهُمَّ بَلِّغْ مَوْلاَنَا الْإِمَامَ الْهَادِيَ الْمَهْدِيَّ الْقَائِمَ بِأَمْرِكَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ وَ عَلَى آبَائِهِ الطَّاهِرِينَ‏
இறைவா! உனது ஏவல்களை நிலைநாட்டவுள்ள நேர்வழி பெற்றவரும், நேர்வழிகாட்டுபவருமான எங்களது காலத்தின் இமாம், எங்களது தலைவர் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களை எங்களிடம் சேர்த்து வைப்பாயாக! அவர் மீதும் அவரது பரிசுத்தமான தந்தைமார் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகட்டும்!.

عَنْ جَمِيعِ الْمُؤْمِنِينَ وَ الْمُؤْمِنَاتِ فِي مَشَارِقِ الْأَرْضِ وَ مَغَارِبِهَا سَهْلِهَا وَ جَبَلِهَا وَ بَرِّهَا وَ بَحْرِهَا
وَ عَنِّي وَ عَنْ وَالِدَيَّ مِنَ الصَّلَوَاتِ زِنَةَ عَرْشِ اللَّهِ وَ مِدَادَ كَلِمَاتِهِ‏
அனைத்து முஃமினான ஆண்கள், பெண்;கள் பூமியின் கிழக்கு, மேற்கு, அதன் பாலைநிலம், மலைகள், தரை, கடல் மேலும் எனது, மற்றும் எனது பெற்றோர்கள்; அனைவரினதும் ஸலவாத்தினை எத்திவைப்பாயாக! அதனை இறை அர்ஷpனதும், முடிவில்லா இறை வார்த்தைகளுக்கும் சமமாக அருள்வாயாக!

وَ مَا أَحْصَاهُ عِلْمُهُ وَ أَحَاطَ بِهِ كِتَابُهُ
மேலும், இறைவனது அறிவும், அவனது வேதமும் சூழ்ந்துள்ளவற்றின் அளவிற்கும் (அருள்வாயாக)

اللَّهُمَّ إِنِّي أُجَدِّدُ لَهُ فِي صَبِيحَةِ يَوْمِي هَذَا وَ مَا عِشْتُ مِنْ أَيَّامِي عَهْداً وَ عَقْداً وَ بَيْعَةً لَهُ فِي عُنُقِي‏
இறைவா! இன்றைய காலைப் பொழுதிலும், நான் வாழ்ந்து வருகின்ற அனைத்து நாட்களிலும், உனது இமாமுக்கான வாக்கும், வாக்குறுதியும், பைஅத் பிரமாணமும் எனது கழுத்திலேயே உள்ளது.

لاَ أَحُولُ عَنْهَا وَ لاَ أَزُولُ أَبَداً
அதனை ஒருபோதும் முறிக்கவோ, அதனை விட்டுவிடவோ மாட்டேன்.

اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ أَنْصَارِهِ وَ أَعْوَانِهِ وَ الذَّابِّينَ عَنْهُ وَ الْمُسَارِعِينَ إِلَيْهِ فِي قَضَاءِ حَوَائِجِهِ‏
இறைவா! என்னை அவரது உதவியாளர்களிலும், தோழர்களிலும், அவரை பாதுகாப்பவர்களிலும் மேலும், அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதில் விரைவாக செயற்படுவோர்களிலும் என்னை ஆக்கிவைப்பாயாக!

وَ الْمُمْتَثِلِينَ لِأَوَامِرِهِ وَ الْمُحَامِينَ عَنْهُ وَ السَّابِقِينَ إِلَى إِرَادَتِهِ وَ الْمُسْتَشْهَدِينَ بَيْنَ يَدَيْهِ‏
மேலும், அவரது கட்டளைகளை பின்பற்றுபவர்களிலும், அவரது சார்பாளர்களிலும், அவரது நாட்டங்களை நிறைவேற்றுபவர்களில் முந்திக் கொள்பவர்களிலும், அவருக்கு மத்தியில் இறைபாதையில் உயிர்த்தியாகம் செய்வோர்களிலும் ஆக்கிவைப்பாயாக!

اللَّهُمَّ إِنْ حَالَ بَيْنِي وَ بَيْنَهُ الْمَوْتُ الَّذِي جَعَلْتَهُ عَلَى عِبَادِكَ حَتْماً مَقْضِيّاً
இறைவா! உனது அடியார்களுக்கு நீ நிச்சயித்திருக்கும் மரணம் எனக்கும் அவருக்குமிடையில் இடைவெளியினை ஏற்படுத்தினால்,
فَأَخْرِجْنِي مِنْ قَبْرِي مُؤْتَزِراً كَفَنِي شَاهِراً سَيْفِي مُجَرِّداً قَنَاتِي مُلَبِّياً دَعْوَةَ الدَّاعِي فِي الْحَاضِرِ وَ الْبَادِي‏
என்னை கபன் அணிந்தவனாக, கூர்மையான வாளினை ஏந்தியவனாக, ஈட்டி, அம்புகளோடும், இமாமின் அழைப்பிற்கு கிராமங்களிலும் , நகரங்களிலும் பதிலளிப்பவனாக மண்ணறையிலிருந்து எழுப்புவாயாக!

اللَّهُمَّ أَرِنِي الطَّلْعَةَ الرَّشِيدَةَ وَ الْغُرَّةَ الْحَمِيدَةَ وَ اكْحُلْ نَاظِرِي بِنَظْرَةٍ مِنِّي إِلَيْهِ‏
இறைவா! பரிபூரண அழகையும், புகழுக்குரிய நெற்றியையும் கொண்ட அவரை எனக்கு காண்பிப்பாயாக! மேலும், அவரை பார்ப்பதின் மூலம் எனது பார்வைகளுக்கு கண்குளிர்ச்சியினை வழங்குவாயாக!

وَ عَجِّلْ فَرَجَهُ وَ سَهِّلْ مَخْرَجَهُ وَ أَوْسِعْ مَنْهَجَهُ وَ اسْلُكْ بِي مَحَجَّتَهُ وَ أَنْفِذْ أَمْرَهُ وَ اشْدُدْ أَزْرَهُ‏
மேலும் அவரது வருகையினை துரிதப்படுத்துவாயாக! அவரது வெளிப்பாட்டினை இலகுவாக்குவாயாக! அவரது வழியினை விரிவுபடுத்துவாயாக! அவரது பாதையில் என்னை வழிகாட்டுவாயாக! அவரது கட்டளைகளை நிலைநாட்டுவாயாக!, அவரது பின்புலத்தினை உறுதிப்படுத்துவாயாக!

وَ اعْمُرِ اللَّهُمَّ بِهِ بِلاَدَكَ وَ أَحْيِ بِهِ عِبَادَكَ فَإِنَّكَ قُلْتَ وَ قَوْلُكَ الْحَقُ‏
இறைவா! அவர் மூலம்; உனது நகரங்களை செழிப்படையச் செய்வாயாக! மேலும், அவர் மூலம் உனது அடியார்களை உயிர்ப்பிப்பாயாக! நிச்சயமாக நீ கூறியதும், உனது வார்த்தையும் சத்தியமாகும்.

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَ الْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ‏
மனிதர்களின் செயலினால் தரையிலும், கடலிலும் தீமைகள் வெளிப்பட்டு விட்டன.

فَأَظْهِرِ اللَّهُمَّ لَنَا وَلِيَّكَ وَ ابْنَ بِنْتِ نَبِيِّكَ الْمُسَمَّى بِاسْمِ رَسُولِكَ‏
இறைவா! உன்னால் நியமிக்கப்பட்ட எங்களது பொறுப்புதாரியினை, உனது தூதரின் பெயரையுடைய உனது நபியின் மகளின் புதல்வரை எங்களுக்காக வெளிப்படுத்துவாயாக!

حَتَّى لاَ يَظْفَرَ بِشَيْ‏ءٍ مِنَ الْبَاطِلِ إِلاَّ مَزَّقَهُ وَ يُحِقَّ الْحَقَّ وَ يُحَقِّقَهُ‏
அனைத்து அசத்தியங்களையும் வெற்றிகொண்டு, அவற்றை அழித்துவிடவும், சத்தியத்தினை நிலைநாட்டி, அவற்றை நடைமுறைப்படுத்தவும் செய்வாயாக!

وَ اجْعَلْهُ اللَّهُمَّ مَفْزَعاً لِمَظْلُومِ عِبَادِكَ وَ نَاصِراً لِمَنْ لاَ يَجِدُ لَهُ نَاصِراً غَيْرَكَ‏
இறைவா! உன்னையன்றி எவ்வித உதவியுமற்ற, அநீதியிழைக்கப்பட்ட உனது அடியார்களின் உதவியாளராகவும், பாதுகாவலராகவும் அவரை ஆக்கிவைப்பாயாக!

وَ مُجَدِّداً لِمَا عُطِّلَ مِنْ أَحْكَامِ كِتَابِكَ وَ مُشَيِّداً لِمَا وَرَدَ مِنْ أَعْلاَمِ دِينِكَ وَ سُنَنِ نَبِيِّكَ صلى‌الله‌عليه‌وآله
மேலும், உனது வேதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படாமலிருக்கும் சட்டங்களுக்கு புத்துயிர் கொடுப்பவராகவும், உனது மார்க்கத்தின் அடையாளங்களை உறுதிப்படுத்துபவராகவும், உனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களது வழிமுறையினை உறுதிப்படுத்துபவராகவும் ஆக்கிவைப்பாயாக!
وَ اجْعَلْهُ اللَّهُمّ مِمَّنْ حَصَّنْتَهُ مِنْ بَأْسِ الْمُعْتَدِينَ‏
மேலும், இறைவா! அவரை எதிரிகளின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களில் உள்ளவராக ஆக்கிவைப்பாயாக!

اللَّهُمَّ وَ سُرَّ نَبِيَّكَ مُحَمَّداً صلى‌الله‌عليه‌وآله بِرُؤْيَتِهِ وَ مَنْ تَبِعَهُ عَلَى دَعْوَتِهِ وَ ارْحَمِ اسْتِكَانَتَنَا بَعْدَهُ‏
இறைவா! உனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களை அவரைப் பார்ப்பதன் மூலம் மகிழ்ச்சியடையச் செய்வாயாக! இமாமவர்களின் அழைப்பினை ஏற்று, அவரை பின்பற்றியவர்களையும் மகிழ்ச்சியடைய வைப்பாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருக்கும் எங்களுக்கு கருணைகாட்டுவாயாக!

اللَّهُمَّ اكْشِفْ هَذِهِ الْغُمَّةَ عَنْ هَذِهِ الْأُمَّةِ بِحُضُورِهِ وَ عَجِّلْ لَنَا ظُهُورَهُ‏
இறைவா! அவரது வருகையின் மூலம் இச்சமூகத்தின் துயரங்களை போக்கிடுவாயாக! அவரது வெளிப்பாட்டினை எங்களுக்காக விரைவுபடுத்துவாயாக!

إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيداً وَ نَرَاهُ قَرِيباً بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ‏
நிச்சயமாக, மற்றவர்கள் அந்த நாளினை தூரமாகப் பார்க்கின்றனர், நாங்களோ மிக அண்மையில் பார்க்கின்றோம், உனது கருணையினைக் கொண்டு, கருணையாளர்களுக்கெல்லாம் மிகக் கருணையாளனே

 


(இதன் பிறகு மூன்று முறை வலது தொடையில் அடித்தவாறு, ஒவ்வொரு தடவையும் இதனைக் கூறவும்)

الْعَجَلَ الْعَجَلَ يَا مَوْلاَيَ يَا صَاحِبَ الزَّمَانِ‏
!காலத்தின் இமாமே! எங்களது தலைவரே
!துரிதமாக வாருங்கள்! துரிதமாக வாருங்கள்

 

Publications