முனாஜாத் ஷஃபானிய்யா

முனாஜாத் ஷஃபானிய்யா

 

முனாஜாத் ஷஃபானிய்யா : அமீருல் முஃமினீன் இமாம் அலீ
அலைஹிஸ்ஸலாம் அவர்களது பிரார்த்தனையாகும். ஷஃபான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டும். இதனை இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரது பிள்ளைகளான ஏனைய இமாம்களும் ஓதியதாக செய்யித் பின் தாவூஸ் அவர்கள் இக்பால் என்ற நூலில் அறிவித்துள்ளார்கள். இதிலிருந்து ஒன்றினை நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது , அது என்னவெனில் அனைத்து பரிசுத்தமான இமாம்களும் இதனை ஓதிவந்துள்ளார்கள். எனவே , இந்த முனாஜாத் மிகவும் பெறுமதிவாய்ந்ததும் , மிகவும் சிறப்புமிக்கதும் என்பதற்கு இதுவே போதுமாகும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
இறைத்தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவாயாக!
وَ اسْمَعْ دُعَائِي إِذَا دَعَوْتُكَ وَ اسْمَعْ نِدَائِي إِذَا نَادَيْتُكَ‏
நான் உன்னை அழைக்கும் போது எனது அழைப்பினை செவிமடுப்பாயாக! நான் உன்னிடம் இறைஞ்சுகின்ற போது நீ எனது இறைஞ்சுதலை கேட்பாயாக!
وَ أَقْبِلْ عَلَيَّ إِذَا نَاجَيْتُكَ فَقَدْ هَرَبْتُ إِلَيْكَ وَ وَقَفْتُ بَيْنَ يَدَيْكَ مُسْتَكِيناً لَكَ مُتَضَرِّعاً إِلَيْكَ‏
உன்னை இரகசியமாக அழைக்கும் போது எனது அழைப்பினை ஏற்பாயாக! (ஏனெனில்) நான் உன்னிடம் ஓடிவந்துள்ளேன் , மேலும் உன்னளவில் தேவையுடையவனாகவும்; உன்னிடம் மன்றாடிக் கேட்பவனாகவும் இருக்;கின்றேன்.
رَاجِياً لِمَا لَدَيْكَ ثَوَابِي وَ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَ تَخْبُرُ حَاجَتِي وَ تَعْرِفُ ضَمِيرِي‏
உன்னிடத்தில் எனது கூலியினை எதிர்பார்த்தவனாக இருக்கிறேன். மேலும் எனது உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். எனது தேவைகளையும் நீ அறிவாய். எனது மறைவான அனைத்தையும் நீ நன்கறிவாய்.
وَ لاَ يَخْفَى عَلَيْكَ أَمْرُ مُنْقَلَبِي وَ مَثْوَايَ‏
எனது நிலையும் நான் செல்லுமிடம் (மறுமை) பற்றிய விடயமும் உனக்கு மறைவாகவில்லை.
وَ مَا أُرِيدُ أَنْ أُبْدِئَ بِهِ مِنْ مَنْطِقِي وَ أَتَفَوَّهَ بِهِ مِنْ طَلِبَتِي وَ أَرْجُوهُ لِعَاقِبَتِي‏
நான் உன்னிடம் பேச விரும்புவதும் , நான் உன்னிடம் தேவையென்று வேண்ட நினைப்பதும், எனது முடிவு நல்லபடியாக அமைய வேண்டுமென்று எதிர்பார்த்திருப்பதும் அனைத்தும் உனக்கு மறைக்கப்பட்டதல்ல.
وَ قَدْ جَرَتْ مَقَادِيرُكَ عَلَيَّ يَا سَيِّدِي فِيمَا يَكُونُ مِنِّي إِلَى آخِرِ عُمْرِي‏
مِنْ سَرِيرَتِي وَ عَلاَنِيَتِي وَ بِيَدِكَ لاَ بِيَدِ غَيْرِكَ زِيَادَتِي وَ نَقْصِي وَ نَفْعِي وَ ضَرِّي‏
என் எஜமானனே! எனக்கு நீ விதித்திருப்பவையும் எனது வாழ்வின் இறுதிவரை எனக்காக நீ நாடியிருப்பதும் எனக்கு இரகசியமாகவும் பரகசியமாகவும் நடப்பவைகள் (யாவும்) உன்னையன்றி வேறு எவரினதும் கையிலில்லை. எனது குறைவும் நிறைவும் நன்மையும் தீமையும் அவ்வாறே!.


إِلَهِي إِنْ حَرَمْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَرْزُقُنِي وَ إِنْ خَذَلْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُنِي‏
என் வணக்கத்துக்குறியவனே! நீ உனது அருளினை எனக்கு தடுத்துவிட்டால் யார் எனக்கு உணவளிப்பார்?, மேலும் நீ என்னை இழிவுபடுத்தி விட்டால் யார் எனக்கு உதவுவார்?
إِلَهِي أَعُوذُ بِكَ مِنْ غَضَبِكَ وَ حُلُولِ سَخَطِكَ‏
என் இறைவா! உனது கோபத்திலிருந்தும் , உன்னிடமிருந்து இறங்கி வரும் வேதனையிலிருந்தும் உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.
إِلَهِي إِنْ كُنْتُ غَيْرَ مُسْتَأْهِلٍ لِرَحْمَتِكَ فَأَنْتَ أَهْلٌ أَنْ تَجُودَ عَلَيَّ بِفَضْلِ سَعَتِكَ‏
என் இறைவா! உனது அன்புக்கு நான் தகுதியற்றவனாக இருந்த போதும், உனது முடிவற்ற கருணையினையும் கொடையினையும் நீ என் மீது அருளுவதற்கு தகுதியானவனாக இருக்கிறாய்.
إِلَهِي كَأَنِّي بِنَفْسِي وَاقِفَةٌ بَيْنَ يَدَيْكَ وَ قَدْ أَظَلَّهَا حُسْنُ تَوَكُّلِي عَلَيْكَ فَقُلْتَ مَا أَنْتَ أَهْلُهُ وَ تَغَمَّدْتَنِي بِعَفْوِكَ‏
என் இறைவா! நான் என் முழுசுயத்துடன் உன்முன்னால் நிற்பதாய் நினைக்கின்றேன், உன் மீது நான் கொண்டுள்ள அழகிய நம்பிக்கை என்மீது நிழல் கொடுத்துள்ளது, நீ உனக்கு தகுதியான நிலையில் என் மீது அருள்புரிந்தாய். உன் மன்னிப்பைக் கொண்டு என்னை போற்றிவிட்டாய்.
إِلَهِي إِنْ عَفَوْتَ فَمَنْ أَوْلَى مِنْكَ بِذَلِكَ‏
என் வணக்கத்துக்குரிய நாயனே! நீ என்னை மன்னித்தால் உன்னையன்றி என்னை மன்னிக்க தகுதியுடையவர் யார்?.

وَ إِنْ كَانَ قَدْ دَنَا أَجَلِي وَ لَمْ يُدْنِنِي مِنْكَ عَمَلِي فَقَدْ جَعَلْتُ الْإِقْرَارَ بِالذَّنْبِ إِلَيْكَ وَسِيلَتِي‏
எனது மரணம் என்னை நெருங்கிவிட்டதென்றாலும் , எனது செயல்கள் உன்னை நெருங்க போதுமானதாக இல்லை. எனது பாவங்களை ஒப்புக்கொண்டு அவற்றினை உன்னிடம் கூறி ,( பாவமன்னிப்பு வேண்டுவதினை) உன்னை நெருங்குவதற்கான ஊடகமாக ஆக்குகின்றேன்.
إِلَهِي قَدْ جُرْتُ عَلَى نَفْسِي فِي النَّظَرِ لَهَا فَلَهَا الْوَيْلُ إِنْ لَمْ تَغْفِرْ لَهَا
என் இறைவா! எனது ஆத்மாவினை கட்டுப்படுத்தாமல் விட்டதினால் அதற்கு நான் அநீதியிழைத்துவிட்டேன். நீ அதனை மன்னிக்கவில்லையேல் எனக்கு நாசமே உண்டாகும்.
إِلَهِي لَمْ يَزَلْ بِرُّكَ عَلَيَّ أَيَّامَ حَيَاتِي فَلاَ تَقْطَعْ بِرَّكَ عَنِّي فِي مَمَاتِي‏
என் இறைவா! என் வாழ்நாளில் முழுவதும் நீ என்மீதான உனது அருளினை நிறுத்தவில்லை , எனவே எனது மரணத்தருவாயிலும் உனது அருளினை துண்டித்துவிடாதே!
إِلَهِي كَيْفَ آيَسُ مِنْ حُسْنِ نَظَرِكَ لِي بَعْدَ مَمَاتِي وَ أَنْتَ لَمْ تُوَلِّنِي إِلاَّ الْجَمِيلَ فِي حَيَاتِي‏
என் இறைவா! எனது மரணத்திற்குப் பின்னர் உனது அருள்பார்வையில் நான் எவ்வாறு நிராசை அடைவேன்? , நீ எனது வாழ்நாள் முழுதும் என்னை மிக அழகிய முறையில் நடத்தினாய்.
إِلَهِي تَوَلَّ مِنْ أَمْرِي مَا أَنْتَ أَهْلُهُ وَ عُدْ عَلَيَّ بِفَضْلِكَ عَلَى مُذْنِبٍ قَدْ غَمَرَهُ جَهْلُهُ‏
என் இறைவா! உனது தகுதிக்கு ஏற்றால் போல் எனது விடயங்களில் நடந்துகொள்வாயாக! மேலும் தனது அறியாமையில் மூழ்கி பாவம் செய்யும் ஒரு பாவிக்கு உனது அருளினை வழங்குவாயாக!

إِلَهِي قَدْ سَتَرْتَ عَلَيَّ ذُنُوباً فِي الدُّنْيَا وَ أَنَا أَحْوَجُ إِلَى سَتْرِهَا عَلَيَّ مِنْكَ فِي الْأُخْرَى‏
என் இறைவா! இவ்வுலகில் நான் செய்த பாவங்களை நீ மறைத்துவிட்டாய் . மேலும் அவற்றை மறுமையிலும் நீ மறைப்பது எனக்கு மிகவும் தேவையானது.
إِلَهِي قَدْ أَحْسَنْتَ إِلَيَّ إِذْ لَمْ تُظْهِرْهَا لِأَحَدٍ مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ‏
என் இறைவா! உனது நல்லடியார்களில் ஒருவர் முன்பும் எனது பாவங்களை வெளிப்படுத்தாமல் எனக்கு நீ நலவு செய்துவிட்டாய்.
فَلاَ تَفْضَحْنِي يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْأَشْهَادِ
எனவே, மறுமையில் அனைவருக்கு முன்பும் என்னை பகிரங்கப்படுத்தி(இழிவுடுத்தி)விடாதே!
إِلَهِي جُودُكَ بَسَطَ أَمَلِي وَ عَفْوُكَ أَفْضَلُ مِنْ عَمَلِي‏
என் இறைவா! உனது கொடை எனது ஆசைகளை அதிகரிக்கச் செய்துவிட்டது, உனது மன்னிப்பு எனது அனைத்து செயல்களை விடவும் சிறந்ததாகிவிட்டது.
إِلَهِي فَسُرَّنِي بِلِقَائِكَ يَوْمَ تَقْضِي فِيهِ بَيْنَ عِبَادِكَ
என் இறைவா! உனது அடியார்களுக்கு முன் நீ தீர்பளிக்கும் நாளில் உன்னை சந்திக்கும் பெருமகிழ்ச்சியினை எனக்குத் தருவாயாக!
إِلَهِي اعْتِذَارِي إِلَيْكَ اعْتِذَارُ مَنْ لَمْ يَسْتَغْنِ عَنْ قَبُولِ عُذْرِهِ‏
என் இறைவா! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். எனது தவறுகளை நீ மன்னிப்பதற்கு நான் (முழுத்) தேவையுள்ளவனாக இருப்பதாகவே எனது மன்னிப்புக் கோரல் அமைகிறது.
فَاقْبَلْ عُذْرِي يَا أَكْرَمَ مَنِ اعْتَذَرَ إِلَيْهِ الْمُسِيئُونَ‏
பாவிகள் தங்களது பாவங்களை கூறி மன்னிப்புக் கேட்கும் அதிக தயாளகுணமுள்ளவனே! என் மன்னிப்புக் கோரலை அங்கீகரிப்பாயாக!
إِلَهِي لاَ تَرُدَّ حَاجَتِي وَ لاَ تُخَيِّبْ طَمَعِي وَ لاَ تَقْطَعْ مِنْكَ رَجَائِي وَ أَمَلِي‏
என் இறைவா! எனது வேண்டுதலை புறக்கணித்துவிடாதே! , உன் மீதான எனது நம்பிக்கையினை நிராசையாக்கிவிடாதே!, உன் மீதான எனது நம்பிக்கையையும் அவாவினையும் துண்டித்துவிடாதே!
إِلَهِي لَوْ أَرَدْتَ هَوَانِي لَمْ تَهْدِنِي وَ لَوْ أَرَدْتَ فَضِيحَتِي لَمْ تُعَافِنِي‏
என் இறைவா! நான் இழிவாவதை நீ விரும்பியிருந்தால் என்னை நேர்வழிப்படுத்தியிருக்க மாட்டாய். மேலும் நீ என்னை மானபங்கப்படுத்த விரும்பியிருந்தால் என்னை மன்னித்திருக்க மாட்டாய்.
إِلَهِي مَا أَظُنُّكَ تَرُدُّنِي فِي حَاجَةٍ قَدْ أَفْنَيْتُ عُمُرِي فِي طَلَبِهَا مِنْكَ‏
என் இறைவா! எனது தேவைகளை உன்னிடம் முன்வைத்து அதனைப் பெற்றுக் கொள்ள எனது வாழ்நாளைக் கழித்தேனே, அவற்றை நீ தட்டிக்கழிப்பாய் என்ற எண்ணம் ஒருபோதும் எனக்கில்லை
إِلَهِي فَلَكَ الْحَمْدُ أَبَداً أَبَداً دَائِماً سَرْمَداً يَزِيدُ وَ لاَ يَبِيدُ كَمَا تُحِبُّ وَ تَرْضَى‏
என் இறைவா! என்றும் நிரந்தரமான , முடிவற்ற புகழனைத்தும் உனக்கே உரியன, நீ பொருந்திக்கொண்டவாறும் உனது விருப்பத்திற்கேற்பவும் அது அதிகரித்தே செல்கின்றது ,குறைவடைவதில்லை.

إِلَهِي إِنْ أَخَذْتَنِي بِجُرْمِي أَخَذْتُكَ بِعَفْوِكَ
என் இறைவா! எனது குற்றங்களுக்காக நீ என்னைத் தண்டித்தால் நான் உனது மன்னிப்பினை எடுத்துக்கொள்வேன்.
وَ إِنْ أَخَذْتَنِي بِذُنُوبِي أَخَذْتُكَ بِمَغْفِرَتِكَ‏
எனது பாவங்களுக்காக நீ என்னை தண்டித்தால் உனது பிழைபொறுத்தலை நான் பற்றிப்பிடித்துக் கொள்வேன்.
وَ إِنْ أَدْخَلْتَنِي النَّارَ أَعْلَمْتُ أَهْلَهَا أَنِّي أُحِبُّكَ‏
மேலும் நீ என்னை நரகில் நுழைவித்தால் நான் அங்குள்ளவர்களிடம் உன்னை நேசிப்பதாக அறிவிப்பேன்.
إِلَهِي إِنْ كَانَ صَغُرَ فِي جَنْبِ طَاعَتِكَ عَمَلِي فَقَدْ كَبُرَ فِي جَنْبِ رَجَائِكَ أَمَلِي‏
என் இறைவா! உன்னை அடிபணிவதற்கான எனது செயல்கள் குறைந்துவிட்டதாயினும் உன்மீதான எனது நம்பிக்கை அதிகரித்தே உள்ளன.
إِلَهِي كَيْفَ أَنْقَلِبُ مِنْ عِنْدِكَ بِالْخَيْبَةِ مَحْرُوماً وَ قَدْ كَانَ حُسْنُ ظَنِّي بِجُودِكَ أَنْ تَقْلِبَنِي بِالنَّجَاةِ مَرْحُوماً
என் இறைவா! நான் எவ்வாறு? உனது சன்னிதானத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவனாக அருளிழந்தவனாக திரும்புவேன்?. நிச்சயமக உனது கொடைமீதும் அருளின் மீதும் நீ என்னை வெற்றியடைந்தோர்களில் ஆக்கிவைப்பாய் என்ற நல்லெண்ணம் எனக்குண்டு.
إِلَهِي وَ قَدْ أَفْنَيْتُ عُمُرِي فِي شِرَّةِ السَّهْوِ عَنْكَ وَ أَبْلَيْتُ شَبَابِي فِي سَكْرَةِ التَّبَاعُدِ مِنْكَ‏
என் இறைவா! எனது வாழ்நாளை உன் நினைவின்றி கழித்துவிட்டேன், மேலும் எனது இளமையினை உன்னை விட்டும் தூரமாக்கும் போதையில் வீணாக்கிவிட்டேன்.
إِلَهِي فَلَمْ أَسْتَيْقِظْ أَيَّامَ اغْتِرَارِي بِكَ وَ رُكُونِي إِلَى سَبِيلِ سَخَطِكَ‏
என் இறைவா! உனது கருணையின் கீழ் உள்ளேன் என்ற மமதையில் நான் விழித்துக்கொள்ளவில்லை. (உலக இன்பங்களில் மீது கொண்ட ஆசையினால்) உனது தண்டனைக்கான வழியை தெரிந்திருக்கவில்லை.
إِلَهِي وَ أَنَا عَبْدُكَ وَ ابْنُ عَبْدِكَ قَائِمٌ بَيْنَ يَدَيْكَ مُتَوَسِّلٌ بِكَرَمِكَ إِلَيْكَ‏
என் இறைவா! எவ்வாறாயினும் நான் உன் அடிமை , உனது அடிமையின் மகன் , உனது தயாள குணத்தின் பொருட்டால் (உன்னிடம் பிரார்த்தித்தவனாக) உன் முன்னே நிற்கின்றேன்.
إِلَهِي أَنَا عَبْدٌ أَتَنَصَّلُ إِلَيْكَ مِمَّا كُنْتُ أُوَاجِهُكَ بِهِ مِنْ قِلَّةِ اسْتِحْيَائِي مِنْ نَظَرِكَ‏
என் இறைவா! நான் உன் அடிமை என்ற வகையில் நான் செய்த பாவங்களினால் உனது பார்வையில் ஏற்பட்ட வெட்கத்தினால் உன்னை விட்டுவிட்டேன்.
وَ أَطْلُبُ الْعَفْوَ مِنْكَ إِذِ الْعَفْوُ نَعْتٌ لِكَرَمِكَ‏
மன்னிப்பு உனது அழகிய கொடையின் வெளிப்பாடு என்பதினால் உன்னிடத்தே பாவமன்னிப்புக் கோருகின்றேன்.
إِلَهِي لَمْ يَكُنْ لِي حَوْلٌ فَأَنْتَقِلَ بِهِ عَنْ مَعْصِيَتِكَ إِلاَّ فِي وَقْتٍ أَيْقَظْتَنِي لِمَحَبَّتِكَ‏
என் இறைவா! உனதன்பினாலேயே அன்றி என்னை உனக்கு மாறுசெய்யாமலிருக்க விழிப்படையச் செய்யும் எவ்வித சக்தியும் எனக்கில்லை.
وَ كَمَا أَرَدْتَ أَنْ أَكُونَ كُنْتُ فَشَكَرْتُكَ بِإِدْخَالِي فِي كَرَمِكَ وَ لِتَطْهِيرِ قَلْبِي مِنْ أَوْسَاخِ الْغَفْلَةِ عَنْكَ‏
நான் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நீ விரும்பினாயோ நான் அவ்வாறே ஆகிவிட்டேன் , உன்னை மறந்திருந்த என்னை எனது உள்ளத்தினை தூய்மைப்படுத்தி, உனது பெருங்கருணைக்குள் உள்வாங்கியதாலும் உனக்கு நான் நன்றி கூறுகின்றேன்.
إِلَهِي انْظُرْ إِلَيَّ نَظَرَ مَنْ نَادَيْتَهُ فَأَجَابَكَ وَ اسْتَعْمَلْتَهُ بِمَعُونَتِكَ فَأَطَاعَكَ‏
என் இறைவா! உனதழைப்பிற்கு பதிலளித்த ஒருவனைப் பார்ப்பது போன்றும், நீ உனது உதவியினால் முற்றிலும் கீழ்படிந்த ஒருவனைப் பார்ப்பது போன்றும் என்னைப் பார்ப்பாயாக!
يَا قَرِيباً لاَ يَبْعُدُ عَنِ الْمُغْتَرِّ بِهِ وَ يَا جَوَاداً لاَ يَبْخَلُ عَمَّنْ رَجَا ثَوَابَهُ‏
(உலகசையினால்) ஏமாற்றப்பட்டு உன்னைவிட்டும் தூரமாகியவனுக்கு மிக நெருக்கமாக இருப்பவனே! உனது கூலியினை எதிர்பார்த்திருப்பவனை நிறாசையாக்காத கொடையாளனே!
إِلَهِي هَبْ لِي قَلْباً يُدْنِيهِ مِنْكَ شَوْقُهُ وَ لِسَاناً يُرْفَعُ إِلَيْكَ صِدْقُهُ وَ نَظَراً يُقَرِّبُهُ مِنْكَ حَقُّهُ‏
என் இறைவா! உன்னை நெருங்கும் ஆசைகொண்ட ஓர் உள்ளத்தினைத் தருவாயாக! உண்மை பேசுவதன் மூலம் உன்னிடம் அழைத்து வரும் நாவினையும் தருவாயாக! சத்தியத்தினைப் பார்க்கும் பார்வை மூலம் உன்னை வந்தடையச் செய்யும் பார்வையினையும் தருவாயாக!
إِلَهِي إِنَّ مَنْ تَعَرَّفَ بِكَ غَيْرُ مَجْهُولٍ وَ مَنْ لاَذَ بِكَ غَيْرُ مَخْذُولٍ وَ مَنْ أَقْبَلْتَ عَلَيْهِ غَيْرُ مَمْلُوكٍ
என் இறைவா! உன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டோர் யாரும் அறியப்படாதோர் அல்லர், உன்னிடம் தஞ்சம் புகுந்தோர் யாரும் இழிவுபடுத்தப்படவில்லை, உனது கருணைக்கு உள்ளானோர் ஒருபோதும் அடிமையானதில்லை.
إِلَهِي إِنَّ مَنِ انْتَهَجَ بِكَ لَمُسْتَنِيرٌ وَ إِنَّ مَنِ اعْتَصَمَ بِكَ لَمُسْتَجِيرٌ وَ قَدْ لُذْتُ بِكَ يَا إِلَهِي‏
என் இறைவா! உனது பாதையில் பயணிப்போரின் பாதை ஒளிமையமானது , உன்னைப் பற்றிப் பிடித்துக்கெபண்டோர் அடைக்களம் வழங்கப்பட்டார்கள், என் இறைவா! உன்னிடம் அடைக்களம் தேடுகின்றேன்.
فَلاَ تُخَيِّبْ ظَنِّي مِنْ رَحْمَتِكَ وَ لاَ تَحْجُبْنِي عَنْ رَأْفَتِكَ‏
உனது அருளின் மீது நான் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிராசையாக்கிவிடாதே! உனது கருணையை விட்டும் என்னை திரையிட்டுவிடாதே!
إِلَهِي أَقِمْنِي فِي أَهْلِ وَلاَيَتِكَ مُقَامَ مَنْ رَجَا الزِّيَادَةَ مِنْ مَحَبَّتِكَ‏
என் இறைவா! உனதன்பினை அதிகரித்துக்கொள்ளும் ஆர்வம் கொண்ட உனது நெருங்கிய நேசர்களின் மத்தியில் என்னையும் வைப்பாயாக!
إِلَهِي وَ أَلْهِمْنِي وَلَهاً بِذِكْرِكَ إِلَى ذِكْرِكَ وَ هِمَّتِي فِي رَوْحِ نَجَاحِ أَسْمَائِكَ وَ مَحَلِّ قُدْسِكَ‏
என் இறைவா! தொடரான உன் நினைவை ஞாபகமூட்டும் உதிப்பை தந்தருள்வாயாக! மேலும் உனது திருநாமங்களினதும் உனது புனிதத்தன்மையினதும் வெளிப்பாட்டை உணர்ந்து மகிழ்வடையும் ஆற்றலையும் தருவாயாக!
إِلَهِي بِكَ عَلَيْكَ إِلاَّ أَلْحَقْتَنِي بِمَحَلِّ أَهْلِ طَاعَتِكَ وَ الْمَثْوَى الصَّالِحِ مِنْ مَرْضَاتِكَ‏
என் இறைவா! உன்னை முழுமையாக வழிப்பட்டோர்களும் ,உனது திருப்பொருத்தத்தினையடைந்த உனது நல்லடியார்களும் அடைந்த ஸ்தானத்தில் என்னையும் சேர்த்துவிடு என்று உன்னைக் கொண்டே உன்னிடம் வேண்டுகின்றேன்.
فَإِنِّي لاَ أَقْدِرُ لِنَفْسِي دَفْعاً وَ لاَ أَمْلِكُ لَهَا نَفْعاً
ஏனெனில் ,நான் என்னை ஆபத்திலிருந்து பாதுகாக்க ஆற்றல் பெறாதவன் , மேலும் எனக்கு நல்லது பயக்கும் தன்மையை கொண்டிராதவன்.
إِلَهِي أَنَا عَبْدُكَ الضَّعِيفُ الْمُذْنِبُ وَ مَمْلُوكُكَ الْمُنِيبُ
என் இறைவா! நான் பாவமிழைத்த உனது பலவீனமான அடிமையாவேன், உன்னிடம் பாவமன்னிப்புத் தேடிவந்துள்ள உனது அடிமையாவேன்.
فَلاَ تَجْعَلْنِي مِمَّنْ صَرَفْتَ عَنْهُ وَجْهَكَ وَ حَجَبَهُ سَهْوُهُ عَنْ عَفْوِكَ‏
எனவே, யாரைவிட்டும் உனது திருமுகத்தைத் திருப்பின்கொண்டாயோ, அவர்களில் என்னையும் ஆக்கிவிடாதே மேலும் உன்னை மறந்ததின் காரணமாக உனது மன்னிப்பினை பெற தகுதி பெறவில்லையோ அவர்களிலும் என்னை ஆக்கிவிடாதே!
إِلَهِي هَبْ لِي كَمَالَ الاِنْقِطَاعِ إِلَيْكَ وَ أَنِرْ أَبْصَارَ قُلُوبِنَا بِضِيَاءِ نَظَرِهَا إِلَيْكَ‏
என் இறைவா! படைப்புக்களிலிருந்து பரிபூரணமாக விடுபட்டு உன்னிடமே (நித்தமும); இருக்கும் பாக்கியத்தினைத் தருவாயாக! மேலும் எங்கள் உள்ளங்களில் உன்னைக்காணும் ஒளியினை ஏற்படுத்துவாயாக!
حَتَّى تَخْرِقَ أَبْصَارُ الْقُلُوبِ حُجُبَ النُّورِ فَتَصِلَ إِلَى مَعْدِنِ الْعَظَمَةِ وَ تَصِيرَ أَرْوَاحُنَا مُعَلَّقَةً بِعِزِّ قُدْسِكَ‏
அதன் மூலம், ஒளிமையமான எங்கள் உள்ளங்கள் ஒளிநிறைந்த திரைகளை கிழித்துச் சென்று, உனது மகிமையின் மையத்தை அடைந்து கொள்ளட்டும், மேலும் எங்கள் ஆத்மாக்கள் உனது புனிதத்தில் ஒன்றிணையட்டும்.
إِلَهِي وَ اجْعَلْنِي مِمَّنْ نَادَيْتَهُ فَأَجَابَكَ وَ لاَحَظْتَهُ فَصَعِقَ لِجَلاَلِكَ فَنَاجَيْتَهُ سِرّاً وَ عَمِلَ لَكَ جَهْراً
என் இறைவா! நீ அழைக்கும் போது அதற்கு பதிலளித்தோர்களில் என்னையும் ஆக்குவாயாக! , மேலும் உனது பார்வைக்குட்பட்டு உனது மாண்பினால் ஈர்க்கப்பட்டோர்களிலும் , மேலும் நீ அவர்களோடு இரகசியமாக உரையாட , அவர்களோ உன்னிடம் வெளிப்படையாக செயற்பட்டார்களே அவர்களில் என்னையும் ஆக்கிவிடுவாயாக!
إِلَهِي لَمْ أُسَلِّطْ عَلَى حُسْنِ ظَنِّي قُنُوطَ الْإِيَاسِ وَ لاَ انْقَطَعَ رَجَائِي مِنْ جَمِيلِ كَرَمِكَ‏
என் இறைவா! உன்மீதான நல்லெண்ணத்தினை நான் நிராசையால் சூழவிடவில்லை, மேலும் உனது அழகிய தயாள குணத்தில் நான் நம்பிக்கை இழக்கவுமில்லை.
إِلَهِي إِنْ كَانَتِ الْخَطَايَا قَدْ أَسْقَطَتْنِي لَدَيْكَ فَاصْفَحْ عَنِّي بِحُسْنِ تَوَكُّلِي عَلَيْكَ‏
என் இறைவா! எனது குற்றங்கள் உனது பார்வையிலிருந்து என்னை விழவைத்திருப்பின், உன் மீதான எனது அழகிய நம்பிக்கையின் மூலம் அவற்றை மன்னிப்பாயாக!
إِلَهِي إِنْ حَطَّتْنِي الذُّنُوبُ مِنْ مَكَارِمِ لُطْفِكَ فَقَدْ نَبَّهَنِي الْيَقِينُ إِلَى كَرَمِ عَطْفِكَ‏
என் இறைவா! எனது பாவங்கள் உனது மாண்புமிகு கருணையிலிருந்து என்னைத் தூரமாக்கியிருப்பினும், உனது கருணை மீதான எனது அபரீத நம்பிக்கை என்னை விழிப்படையச் செய்துவிட்டது.
إِلَهِي إِنْ أَنَامَتْنِي الْغَفْلَةُ عَنِ الاِسْتِعْدَادِ لِلِقَائِكَ فَقَدْ نَبَّهَتْنِي الْمَعْرِفَةُ بِكَرَمِ آلاَئِكَ‏
என் இறைவா! உன்னை சந்திப்பதற்கான தயார்நிலையிலிருந்து என்னை எனது அஜாக்கிரதை தடுத்திருந்தாலும், உனது அருட்கொடைகள் மீதான எனது அறிவு என்னை விழிப்படையச் செய்துவிட்டது.
إِلَهِي إِنْ دَعَانِي إِلَى النَّارِ عَظِيمُ عِقَابِكَ فَقَدْ دَعَانِي إِلَى الْجَنَّةِ جَزِيلُ ثَوَابِكَ‏
என் இறைவா! உனது கடுமையான தண்டனைகள் என்னை நரகை நோக்கி அழைப்பின், உனது உயர்வான பெருங்கருணையும் கூலியும் என்னை சுவனத்தின்பால் உறுதியோடு அழைக்கின்றன.
إِلَهِي فَلَكَ أَسْأَلُ وَ إِلَيْكَ أَبْتَهِلُ وَ أَرْغَبُ وَ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ
என் இறைவா! உன்னிடமே கேட்கின்றேன், உன்னிடமே மன்றாடுகின்றேன், உன்னையே ஆசைகொண்டுள்ளேன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறும் படி உன்னிடம் வேண்டுகின்றேன்.
وَ أَنْ تَجْعَلَنِي مِمَّنْ يُدِيمُ ذِكْرَكَ وَ لاَ يَنْقُضُ عَهْدَكَ وَ لاَ يَغْفُلُ عَنْ شُكْرِكَ وَ لاَ يَسْتَخِفُّ بِأَمْرِكَ‏
உன்னை நித்தமும் ஞாபகப்படுத்துவோர்களிலும், உனது வாக்குறுதிகளை மீறாதவர்களிலும், உனக்கு நன்றி செலுத்துவதை மறவாதவர்களிலும், உனது கட்டளைகளை சிறுமைப்படுத்தாதவர்களிலும் என்னை ஆக்கிவைப்பாயாக!
إِلَهِي وَ أَلْحِقْنِي بِنُورِ عِزِّكَ الْأَبْهَجِ فَأَكُونَ لَكَ عَارِفاً وَ عَنْ سِوَاكَ مُنْحَرِفاً وَ مِنْكَ خَائِفاً مُرَاقِباً
என் இறைவா!உன்னை நன்கறிவதற்காகவும், உன்னைத் தவிர பிறரைவிட்டு தூரமாவதற்கும், உன்னிடம் அஞ்சி கண்காணிப்போடு நடந்து கொள்வதற்கும் என்னை உனது பிரமாண்டமான கண்ணியமிகு ஒளியில்; இணைத்துவிடுவாயாக!
يَا ذَا الْجَلاَلِ وَ الْإِكْرَامِ وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ رَسُولِهِ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ سَلَّمَ تَسْلِيماً كَثِيراً
மேலான கண்ணியமும் சங்கையும் கொண்ட நாயனே! இறைவன் அவனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது பரிசுத்தமான குடும்பத்தார் மீதும் ஸலவாத் கூறுவானாக! மேலும் அளவின்மையான சாந்தியையும் அவர்கள் மீது அருள்வானாக!

Publications